Breaking News

பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தார்..!

2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி வருகிற மார்ச் 31-ம் தேதியன்று அகமதாபாத்தில் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை படிக்க : – கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த அஸ்வின் – 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *