
கிரிக்கெட் போட்டியின் போது விராட் கோலி தன்னை வம்பிழுத்து ஸ்லெட்ஜிங் செய்ததாக பாகிஸ்தான் வீரர் சோஹைல் கான் கூறியுள்ளார்.
2015 உலகக் கோப்பை போட்டியின் போது விராட் கோலி தன்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயன்றது குறித்து தற்போது பேசியிருக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான்.
யூடியுப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நான் பேட் செய்ய நின்றிருந்த போது, விராட் கோலி என்னிடம் வந்து இப்போதுதான் வந்துள்ளீர்கள், நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே’ என்று சீண்டினார்.

சிறந்த பதிலடி (நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா)
அதற்கு நான் பதிலடியாக, ”மகனே, நீ இந்தியாவுக்காக அண்டர்-19 விளையாடும் போது, நான் ஒரு டெஸ்ட் வீரர்’” என்றேன்.
அப்போது மிஸ்பா என்னை அமைதியாக இருக்கும்படி சொன்னார்.

தோனியின் சிறந்த தலைமைத்துவம்
அதே போல், தோனி கோலியிடம், ”விட்டுவிடுங்கள். அவர் (சோஹைல் கான்) அனுபவம் வாய்ந்தவர். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாது” என்று கூறியதாக சோஹைல் கான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க :- மோசமாக விளையாடும் இஷான் கிஷன் முன்னாள் வீரர் எச்சரிக்கை..! ‘இது முதல் முறையல்ல…’?
One comment
Pingback: அடுத்த டி20 உலகக்கோப்பையில் கோலி விளையாடுவார் ..! ஆனால் ரோகித் கண்டிப்பாக விளையாட மாட்டார் - முன்