
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு T20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மாத்திரமே பெற்று கொண்டது
இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை தீப்தி சர்மா தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடத்தில்
இந்நிலையில் மகளிர் டி20 போட்டியின் பந்து வீச்சாளர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது . இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்
முதல் இடத்தில்

முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஓர் இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.
One comment
Pingback: T20 தொடரை கைப்பற்றிய இந்தியா..| சுப்மன் கில் கொடுத்த ஷாக்..? - KKnewsN